பல்லவி
எத்தனை திரள் என் பாவம், என் தேவனே!
எளியன் மேல் இரங்கையனே.
அனுபல்லவி
நித்தம் என் இருதயம் தீயதென் பரனே;
நிலைவரம் எனில் இல்லை; நீ என் தாபரமே. - எத்தனை
சரணங்கள்
1. பந்தம் உன்மேல் எனக்கில்லை என்பேனோ?
பணிந்திடல் ஒழிவேனோ?
சுத்தமுறுங் கரங்கால்கள், விலாவினில்
தோன்றுது காயங்கள் தூய சிநேகா! - எத்தனை
2. என்றன் அநீதிகள் என் கண்கள் முனமே
இடைவிடாதிருக்கையிலே,
உன்றன் மிகுங் கிருபை, ஓ! மிகவும் பெரிதே,
உத்தம மனமுடையோய், எனை ஆளும்! - எத்தனை
3. ஆயங்கொள்வோன்போல் பாவஸ்திரீ போல்
அருகிலிருந்த கள்ளன் போல்
நேயமாய் உன் சரண் சரண் என வணங்கினேன்;
நீ எனக்காகவே மரித்தனை, பரனே - எத்தனை
4. கெட்ட மகன் போல் துட்டனாய் அலைந்தேன்,
கெடு பஞ்சத்தால் நலிந்தேன்;
இட்டமாய் மகன் எனப் பாத்திரன் அல னான்
எனை ரட்சித்திடல் உன்றன் நிமித்தமே, அப்பனே! - எத்தனை
த. பலவேந்திரம் ஐயர்


0 Comments