Ticker

6/recent/ticker-posts

எத்தனை திரள் என் பாவம் | Ethanai Thiral En Pavam | PPT



                                                                        பல்லவி

எத்தனை திரள் என் பாவம், என் தேவனே!

எளியன் மேல் இரங்கையனே.

                                                                        அனுபல்லவி

நித்தம் என் இருதயம் தீயதென் பரனே;

நிலைவரம் எனில் இல்லை; நீ என் தாபரமே. -  எத்தனை

                                                                        சரணங்கள்

1. பந்தம் உன்மேல் எனக்கில்லை என்பேனோ?

பணிந்திடல் ஒழிவேனோ?

சுத்தமுறுங் கரங்கால்கள், விலாவினில்

தோன்றுது காயங்கள் தூய சிநேகா! - எத்தனை

2. என்றன் அநீதிகள் என் கண்கள் முனமே

இடைவிடாதிருக்கையிலே,

உன்றன் மிகுங் கிருபை, ஓ! மிகவும் பெரிதே,

உத்தம மனமுடையோய், எனை ஆளும்! - எத்தனை

3. ஆயங்கொள்வோன்போல் பாவஸ்திரீ போல்

அருகிலிருந்த கள்ளன் போல்

நேயமாய் உன் சரண் சரண் என வணங்கினேன்;

நீ எனக்காகவே மரித்தனை, பரனே - எத்தனை

4. கெட்ட மகன் போல் துட்டனாய் அலைந்தேன்,

கெடு பஞ்சத்தால் நலிந்தேன்;

இட்டமாய் மகன் எனப் பாத்திரன் அல னான்

எனை ரட்சித்திடல் உன்றன் நிமித்தமே, அப்பனே! - எத்தனை

                                                                                                    த. பலவேந்திரம் ஐயர்




Post a Comment

0 Comments