1. இவ்வந்தி நேரத்தில் எங்கே
போய்த் தங்குவீர், என் இயேசுவே,
என் நெஞ்சில் நீர் பிரவேசிக்கும்
மா பாக்கியத்தை அருளும்.
2. ஆ, நேசரே நீர் அடியேன்
விண்ணப்பத்துக் கிணங்குமேன்;
என் நெஞ்சின் வாஞ்சை தேவரீர்
ஒருவரே என்றறிவீர்.
3. பொழுது சாய்ந்து போயிற்று
இரா நெருங்கி வந்தது;
மெய்ப் பொழுதே, இராவிலும்
இவ்வேழையை விடாதேயும்.
4. ஆ, என்னைப் பாவ ராத்திரி
பிடித்துக் கெடுக்காதினி;
நீர் ஒளி வீசியருளுமே
ரட்சிப்பின் பாதை காண்பியும்.
5. நீர் என் கடை இக்கட்டிலும்
என்னோடிருந்து ரட்சியும்;
உம்மைப் பிடித்து பற்றினேன்
நீர் போய்விடீர் என்றறிவேன்.


0 Comments