Ticker

6/recent/ticker-posts

இவ்வந்தி நேரத்தில் எங்கே | Ivvanthi Nerathil Engae | PPT






       1. இவ்வந்தி நேரத்தில் எங்கே

போய்த் தங்குவீர், என் இயேசுவே,

என் நெஞ்சில் நீர் பிரவேசிக்கும்

மா பாக்கியத்தை அருளும்.

2. ஆ, நேசரே நீர் அடியேன்

விண்ணப்பத்துக் கிணங்குமேன்;

என் நெஞ்சின் வாஞ்சை தேவரீர்

ஒருவரே என்றறிவீர்.

3. பொழுது சாய்ந்து போயிற்று

இரா நெருங்கி வந்தது;

மெய்ப் பொழுதே, இராவிலும்

இவ்வேழையை விடாதேயும்.

4. ஆ, என்னைப் பாவ ராத்திரி

பிடித்துக் கெடுக்காதினி;

நீர் ஒளி வீசியருளுமே

ரட்சிப்பின் பாதை காண்பியும்.

5. நீர் என் கடை இக்கட்டிலும்

என்னோடிருந்து ரட்சியும்;

உம்மைப் பிடித்து பற்றினேன்

நீர் போய்விடீர் என்றறிவேன்.





Post a Comment

0 Comments