1. பிளவுண்ட மலையே
புகலிடம் ஈயுமே;
பக்கம் பட்ட காயமும்
பாய்ந்த செந்நீர் வெள்ளமும்
பாவதோஷம் யாவையும்
நீக்கும்படி அருளும்.
2. எந்தக் கிரியை செய்துமே,
உந்தன் நீதி கிட்டாதே;
கண்ணீர் நித்தம் சொரிந்தும்
கஷ்ட தவம் புரிந்தும்
பாவம் நீங்க மாட்டாதே
நீரே மீட்பர் இயேசுவே.
3. யாதுமற்ற ஏழை நான்,
நாதியற்ற நீசன் தான்;
உம் சிலுவை தஞ்சமே,
உந்தன் நீதி ஆடையே;
தூய ஊற்றை அண்டினேன்,
தூய்மையாக்கேல் மாளுவேன்.
4. நிழல் போன்ற வாழ்விலே,
கண்ணை மூடும் சாவிலே,
கண்ணுக்கெட்டா லோகத்தில்
நடுத்தீர்வைத் தினத்தில்
பிளவுண்ட மலையே
புகலிடம் ஈயுமே.


0 Comments